Sunday, October 26, 2008

பச்சைத் துரோகி க(லைஞ)யவன்(ர்?) கருணா(நிதி)

தமிழர் இதயத்திலெல்லாம் இடியை இறக்கி விட்டான்(ர்?). நெஞ்சைப் பிளந்து நெருப்பை திணித்து விட்டான்(ர்?). பதவிப் பிச்சைக்காக தமிழர் நலனை அடகு வைத்து விட்டான்(ர்?)















தமிழகத்தில் வைகோ, பழ,நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் சிறுகச் சிறுக குருவிபோல திரட்டி கட்டிக் காத்து வந்திட்ட தமிழின உணர்வையும் தமிழீழ ஆதரவையும் நயவஞ்சகமாகக் கவர்ந்து காங்கிரசின் காலடியில் தன் பதவியைக் காத்துக் கொள்வதற்காக காவு கொடுத்துவிட்டான்(ர்?).



வைகோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்ததற்கு துரோகப் பட்டம் கட்டி கலைஞனுக்கு காவடி எடுத்தன வலையுலகக் கழகக் குஞ்சுகள்.



இப்போது எங்கே போய் வைத்துக் கொள்ளப் போகிறீர்கள் உங்கள் முகங்களை?



அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துக் கொண்ட தீர்மானங்களுக்கு மாறாக, தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என அறிவித்துள்ளான்(ர்?) இந்த கட்டையில் போகிற கருணாநிதி.

இவன்(ர்?) கட்டையில் போகிற காலத்தில் த்மிழர் நலனையும் சேர்த்து புதைத்து விட எண்ணியுள்ளாரோ என்னவோ?



இலங்கையின் ஊதுகோலாக வந்த பிரணாப் முகர்ஜி கொடுத்த வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு தமிழர் நலனை காவு கொடுத்துள்ளான்(ர்?) இந்த தமிழினத் தலைவர் வேடம் போட்டு டெல்லியிடம் காட்டிக் கொடுத்த துரோகி...



தமிழர் இதயத்திலெல்லாம் இடியை இறக்கி விட்டான்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை....

படிக்கவும்.

ஐ.பி.என். செய்தி:  DMK MPs won't quit over Lankan issue: TN CM



காட்டிக் கொடுப்பவன் எங்கே?

அந்தக் கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி!
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!
பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

Sunday, October 19, 2008

தமிழின விரோதிகளே மனதை மாற்றிக் கொள்வீர்

தமிழின விரோதிகள் இன்னும் ஏதாவது காரணங்களைத் தேடிப் பிடித்து தாங்கள் ஏன் தமிழீழத்தை ஆதரிக்கக் கூடாது எனவும் , தமிழகத் தமிழர்கள் இந்திய அரசுக்கு விரோதமாக நடப்பதாயும் தங்கள் ஊடகங்களின் வாயிலாக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். அவர்களை தமிழர்களாகக் கருதாமல் மனிதர்களாகக் கருதி உங்கள் ஈழ எதிர்ப்பினைக் கைவிடுங்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் துன்பப்படும் மக்களாய் கருதி தமிழீழத்தை ஆதரித்திடுங்கள்.

நாள் தோறும் சிங்கள இனவெறி பிடித்த ராணுவத்தின் பிடியில் அவர்கள் படும் துயரத்தில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.




தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்போம்.

Thursday, October 16, 2008

பகுத்தறிவு For Dummies !!!

பகுத்தறிவு பற்றி நிலவும் பெரும் குழப்பம் காரணமாக ஏகப் பட்ட பிரச்சினைகள் இன்னைக்கு நாட்டுல நடந்துகிட்டு இருக்கிறது. வலைப் பதிவுகளில் பார்த்தால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு முத்திரை குத்தி வச்சிருக்காங்க. இவர் ஒரு கொண்டை இவர் இப்படித்தான் எழுதுவார். இவர் ஒரு குல்லா இவர் இப்படிதான் எழுதுவார். அவர் பகுத்தறிவுவாதி அதனாலே அவர் அப்படித்தான் எழுதுவார்.




இதிலே குல்லாக்கள் ஒரு சில குல்லாக்களை இவர் போலி குல்லா இவருக்கு சரியான குல்லா பத்தி தெரியலே அப்பிடினும், கொண்டைகள் மற்ற கொண்டைகளைப் பத்தி போலி கொண்டைன்னும், எல்லாரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ பகுத்தறிவுவாதிகளை போலிகள்னும் சொல்லிக் கிட்டே இருக்காங்க. பகுத்தறிவு வாதிகளே இன்னொரு பகுத்தறிவு வாதியைப் பார்த்து நீங்க சொன்னது கொள்கைக்கு முரணானது அதனாலே நீங்க உண்மையிலேயே பகுத்தறிவு வாதியா இல்லைனா போலியா அப்பிடினும் பின்னூட்ட கச்சேரி நடத்தி வருகின்றனர்.

ஆகையினாலே ஏதோ நமக்கு தெரிஞ்சதை எளிமையாச் சொல்லி வப்போமே அப்பிடினுதான் இந்த பதிவு.

அந்த வகையில பார்த்தா நம்ம முன்னாடி ரெண்டு கேள்விகள் இருக்கு. 1). கடவுள் மறுப்புன்னா என்ன? 2). பகுத்தறிவுன்னா என்ன?

இதிலே யார் கடவுள் மறுப்பாளர்கள் அப்படிங்கிற கேள்விக்கு பொதுவா கடவுள் இல்லைனு சொல்றவங்க எல்லாம் கடவுள் மறுப்பாளர்கள் என்பது....



தவறான விடை!..

எப்பிடினா? இப்போ உலகத்திலே ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கு. குறைந்த பட்சம் ஒரு மதத்துக்கு ஒரு கடவுளாவது இருக்கும். எல்லா மதத்துக் காரங்களும் அடுத்த அல்லது மற்ற மதத்துக் கடவுள்களை மறுக்காங்க.. இப்பொ என்ன ஆயிப் போச்சு மற்ற மதக் கடவுள்களை மறுக்கிறதாலே அவங்கல்லாம் கடவுள் மறுப்பாளர்கள் வகையில சேர்ந்துடுதாங்க..

இந்த மத்த மதத்துக் கடவுளை மறுக்கும் கடவுள் மறுப்பாளர்கள் எல்லாம் அவங்க கடவுள் சொன்னதைக் கேக்கிறாங்களானு பார்த்தா அதுவும் இல்லை. இவங்க இவங்களோட சொகுசு வாழ்க்கைக்காக புதுசு புதுசா எதாவது பண்ணி கடவுள் படைச்சதை அல்லது சொன்னதை மறுக்கிறாங்க. இது எப்பிடினா ரொம்ப எளிமையானதுதான்.. எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். மறுபடியும் சொன்னா சலிச்சுக்கிட மாட்டீங்கனு நினைக்கேன். இவங்க கடவுளோட படைப்புக்கு எதிரா முடியை வெட்டிக்கிறது, நகத்தை வெட்டிக்கிறது, உடை அணியறது இந்த மாதிரி. அப்போ இவங்க இவங்களோட கடவுள் செஞ்சதையும் மறுக்கிறாங்க..

இதுலே ஒருசிலர் அவங்க கட்வுள் சொன்னதையோ அல்லது படைச்சதையோ அப்பிடியே கடைப்பிடிக்கக் கூடியவங்களும் இருக்காங்க. அதுக்காக நாம அவங்களைப் பாராட்ட முடியாது. நீங்களே நினைச்சுப் பாருங்களேன் நகம் வெட்டிக்காம, முடி வெட்டிக்காம, உடை அணியாம. கொடூரமா இருக்காது.

அந்த மட்டில் பெரும்பான்மையான மதவாதிகளும் அல்லது மதத்தைப் பின்பற்றக் கூடியவர்களும் கடவுள்மறுப்பாளர்களாக இருக்காங்களேனு மகிழ்ச்சிதான். இல்லனா நாறிப் போயிரு(க்கு)ம்லா..

இப்போ கடவுள் மறுப்பாளர்கள்னா யாருன்னு தெரிஞ்சு போச்சு. இதை வச்சுக்கிட்டு பகுத்தறிவுன்னா என்ன? யார் பகுத்தறிவாளர்கள் அப்பிடினு பார்க்கலாம்.

பகுத்தறிவைப் பத்தி உலகப் பொதுமறை திருக்குறள் தந்த அய்யன் திருவள்ளுவர் என்ன சொல்லுதாருன்னா...

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எளிமையாச் சொல்லனும்னா என்ன விஷயமா இருந்தாலும் இவன் சொன்னான் அவன் சொன்னான் அப்பிடினு நம்பிடாம, அல்லது இந்த புத்தகத்திலே இருக்கு, அந்த புத்தகத்திலேஇருக்கு அப்படினு நம்பிவிடாமல் அதில் எந்த அளவுக்கு உண்மையிருக்குனு ஆராய்ந்து பார்த்து பிறகுதான் முடிவுக்கு வரணும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா என்ன சொல்லுதுனா..

“பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.”

மனிதனுக்கு மட்டும் தான் சரியா, தவறா, நல்லதா, கெட்டதா அப்பிடினெல்லாம் சிந்திக்கக் கூடிய வகையில் ஆறறிவு இருப்பதாக சொல்லப் படுகிறது. அதைப் பயன் படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.

மூடநம்பிக்கையில்லாதவங்க எல்லாம் பகுத்தறிவாளர்கள்னு சொல்லலாம். இந்த ஒரே வரியில் எல்லாமே அடங்கிரும். இப்போ ஒருத்தரு பகுத்தறிவுவாதியா இருக்கணும்னா பெரியாரியலையோ, மார்க்சியத்தையோ கரைச்சுக் குடிச்சிருக்கனுங்கிற அவசியம் இல்லை. தன் முன் வைக்கப் படுகிற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி விடை கண்டால் போதும். முன்னால் சொல்லப் பட்டது அப்பிடின்கிறதாலே அப்பிடியே நம்பி விடக் கூடாது. இதையேதான் பெரியாரும் மற்றெல்லாத் தலைவர்களும் அவங்கவங்க மொழியில சொல்லிருக்காங்க..

இந்த உலகத்திலே ஒரு மதவாதியாக இருப்பது மிகவும் எளிது. ஆனால் முன்னோர்கள், பெற்றோர்கள், சமூகம் அத்தனைக்குள்ளும் கட்டமைக்கப் பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்து வெளிவந்து பகுத்தறிவாளராய் இருப்பதே சவாலானது. இந்த சவாலைச் சமாளித்து வெற்றி நடைபோடும் அனவருக்கும் வாழ்த்துகள்.

எல்லாத்துக்கும் மேலே ஒருத்தன் மூடநம்பிக்கைகளை விடுத்து பகுத்தறியத் துவங்கி விட்டானோ, அவன் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கிறவனாயிருக்கிறான். சுயனலமற்றவனாயிருக்கிறான். தனி மனித ஒழுக்கங்களைப் பேணுபவனாய் இருக்கிறான்.

என்னை இந்த பதிவு எழுதுமாறு தூண்டிய செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.


” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை“

நானும் திருக்குறள் சொல்லி முடிக்கிறேன்.

Wednesday, October 15, 2008

எம்.பி பதவி ராஜினாமா, சர்வபரித் தியாகத்துக்கும், ஆயத்தமாக உள்ளோம்: வைகோ

மதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார்.
'தமிழர் நலன் காக்கவும், ஈழத் தமிழர் இன‌ப்படுகொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள ம.தி.மு.க.வுக்கு அதன் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது செயலாளர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், ''இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்க திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்து கொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்துள்ளது. எனவே இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட உதவி அல்ல, சிங்கள அரசுக்கு இராணுவ பலத்தைக் கூட்டுவதற்காகவே வழங்கப்பட்ட உதவி ஆகும்.

இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங், அக்டோபர் 2ஆ‌ம் தேதியன்று எனக்கு எழுதியுள்ள கடிதம் ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. இலங்கை விமானப்படைக்கு வழங்கி உள்ள ரேடார்களை, இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இலங்கைக்கு அனுப்பி உள்ள இந்திய இராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும்.

குறைந்த வட்டியில் மானிய உதவி போல இலங்கைக்கு வழங்குவதாகச் சொன்ன கடனை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.


இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் செய்து கொண்ட தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இலங்கை இராணுவத்துக்கும், விமானப்படையினருக்கும் இந்தியாவில் அளிக்கின்ற பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கை சிங்கள அரசு தன்னிச்சையாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒவ்வொரு நாளும், தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி, பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதால், உடனடியாகத் தாக்குதலை இலங்கை அரசு நிறுத்திவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்குமாறும் சிங்கள அரசின் நடவடிக்கைகளால் முறிந்து போன அமைதிப் பேச்சுக்களை ஏற்கனவே நடுநிலைமையோடு கடமை ஆற்றிய நார்வே அரசை நடுவராகக் கொண்டு நடத்த வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு நிர்‌ப்பந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் வற்புறுத்துவதோடு, இதைச் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால், இலங்கையுடனான ராஜிய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளும் என்றும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வராவிடில், அந்த அரசுக்குத்தரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.


ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களவருக்கு ஆயுதங்களை வழங்கி துரோகம் செய்த இந்திய அரசின் குற்றத்துக்கு மத்திய அமைச்சரவைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்வதற்கு உரிய நிர்‌பந்தத்தை மத்திய அரசு உடனடியாகச் செய்யாவிடில், அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக் கொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல'' எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


நன்றி: வெப் துனியா
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0810/15/1081015025_1.htm

Tuesday, October 14, 2008

என்ன பொருத்தம்: தமிழீழம் Vs கொசோவா

    “ சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை”  இது ஒவ்வொரு  இந்தியனையும் தட்டியெழுப்பிய திலகரின் அறிவிப்பு.

இலங்கைத் தமிழர் படும் இன்னல்களுக்குத் தீர்வுகாணும் போது, உலகின் பிற பாகங்களில் நடைபெற்று வந்த அதே போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வாறு ஒரு நிரந்தரமான தீர்வு காணப் பட்டது என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் இன்றைய வெப் துனியா இணைய இதழில் வெளியான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி நம் அனைவரின் பார்வைக்கு.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயத்தில் கொசோவோவை பார்க்க வேண்டியதன் அவசியமென்ன? அவசியம் ஏதெனில், அந்நாட்டின் பிறப்பிற்கும் இலங்கையில் நடந்துவருவது போன்ற இன ஒடுக்கலே காரணமாகும்.

ஐரோப்பாவில் முன்பு யுகோஸ்லாவியாவின் ஒரு அங்கமாகவும், பிறகு செர்பிய குடியரசின் அங்கமாகவும் இருந்தது கொசோவோ பகுதி. அங்கு வாழ்ந்த அல்பானியர்க‌ள் அந்நாட்டின் பெரும்பான்மை (செர்பிய) இனத்தவர்களின் ஆதரவு பெற்ற செர்பிய அரசால் தொடர்ந்த இன ஒடுக்கலுக்கு ஆளாகிவந்த நிலையில், அதற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவந்த கொசோவோ, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்தது.


அதன் சுதந்திரப் பிரகடனத்தை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல நாடுகளும் அங்கீகரித்துவிட்டன.

கொசோவோ மக்களின் விடுதலை உணர்விற்கு வித்திட்டது மிலோவிச் தலைமையிலான கம்யூனிச- செர்பிய பேரினவாத அரசு. அதற்கு எதிராக முதலில் சாத்வீக வழியிலும், பிறகு ஆயுதமெடுத்தும் போராடிய அம்மக்களுக்கு அமெரிக்காவும், அதன் நோட்டோ கூட்டாளி நாடுகளும் ஆதரவாக நின்றன. அதன் காரணமாக கொசோவோ மக்களின் பிரச்சனை ஐ.நா. பாதுகாப்புப் பேரவைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன ஒடுக்கலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு கொசோவோ நாட்டிற்குள் சென்ற ஐரோப்பிய அமைதிப் படைகள், அல்பானியர்களை அழித்துக்கொண்டிருந்த மிலாசோவிச்சின் செர்பிய படைகளை வெளியேற்றின. அங்கு கொசோவோ மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றமும், அரசும் நிறுவப்பட்டது.

10 ஆண்டுக்கால சுயாட்சிக்குப் பிறகு, தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர நாடாக, தங்களுடைய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, பிரகடனம் செய்தது கொசொவோ அரசு.

இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும், தொன்றுதொட்டு அம்மண்ணில் வாழ்ந்துவரும் சிறுபான்மை இனமான தமிழர்களை கால் நூற்றாண்டிற்கும் மேலாக கொன்று குவித்துவருகிறது. அவர்களின் பாரம்பரிய பூமியில் இருந்து அவர்களை பலாத்காரமாக வெளியேற்றி சிங்களர்களை குடியமர்த்தி, அப்பகுதிகளின் பெயர்களையும் சிங்கள‌ப் பெயர்களாக மாற்றி வருகிறது.

சிறிலங்க அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு இடமில்லை. அவர்களின் பாரம்பரிய பூமியில் வாழ்வுரிமை ப‌றிக்கப்பட்டு அனாதைகளாக ஆ‌க்கப்பட்டுள்ளனர்.

கொசோவோவில் எது நடந்ததோ அதுவே மிக உக்கிரமாக இலங்கையிலும் நடைபெற்று வருகிறது. அந்த மக்களுக்குத் தெளிவான தீர்வைத் தந்த உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கும் அதே தீர்வை வழங்கிட வேண்டும்.

ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்குரிய வாழ்வுரிமையை உறுதிசெய்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆதரவளித்திட வேண்டும்.


அதற்கு முதற்படியாக சிறிலங்க அரசின் இனப் படுகொலையை நிறுத்தவும், தமிழர்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

இலங்கையில் அமைதி ஏற்பட அனுசரணையாளராக பணியாற்றிய நார்வே நாடு, தனது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து அம்முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதனை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
 
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை, அந்நாட்டு அரசினாலும், அதன் உந்துதலின் பேரில் அந்நாட்டு இராணுவமும், காவல்துறையும் மேற்கொண்டுவரும் இன அழித்தல் நடவடிக்கையினாலும் கேள்விக்கு‌றியாகிவிட்ட நிலையில், அம்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் தலையாய கடமையாகும்.
 
இந்த ஒரு வழியைத் தவிர, இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கூடிய வேறு வழி ஏதுமில்லை.
 
நன்றி: http://tamil.webdunia.com/

Wednesday, October 1, 2008

கருணாநிதிக்கு காது வேலை செய்கிறதா? - செய்தி

காட்டிக் கொடுப்பவன் எங்கே?
அந்தக் கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி!
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!
பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

இந்தக் கவிதைக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்களாக தொடர்பு படுத்திக் கொண்டால் அதற்கு யாரும் பொறுப்பில்லை. உங்கள் கற்பனை மட்டுமே பொறுப்பு.

இலங்கை தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் ராமதாசு கேள்வி.. பின் வருமாறு..

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது. தமிழன் தூங்குகிறான். அங்கு போடப்படும் குண்டுகளின் சத்தம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் காதில் விழவில்லையா?.




நீங்கள் 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளீர்கள். 6-வது முறையாகவும் நீங்கள் ஆளுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், ஈழ தமிழகம் மலரும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்.



விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் அன்று மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிட்டதாக கூறினீர்கள். இப்போது, மத்தியிலும் உங்களது தயவில்தானே ஆட்சி நடக்கிறது. இப்போது அந்த பிரச்சினை குறித்து பேசவேண்டியது தானே?. அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா என்ன?. நீங்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் பேசுவதை உலக தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் வாய் சொல்தான் அருமருந்து. உடனே, இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களே 10 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுங்கள்.



தி.மு.க. எம்.பி.க்கள், மற்றும் பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் குழுவை இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு அனுப்புங்கள். அவர்கள் அங்குள்ள உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லட்டும்.



தற்போது சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ள ரேடார் கருவி முப்பரிமானம் கொண்டது. இது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை மட்டும் அல்லாமல், தென் இந்தியாவையும் காட்டிக் கொடுக்கும். அது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், உளவுப் பிரிவுக்கும் தெரியாதா?.



இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்காவிட்டால் கருஞ்சட்டை படைகள் 1,000 பேர் ஒன்றிணைந்து சென்னை தீவுத்திடலில் தீப்பந்தம் ஏந்தி, ஈழ தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழம் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்.



மேலும், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை நீங்கள் உடனே கைது செய்து சிறையில் அடையுங்கள். விட்டு விடாதீர்கள். அடுத்து எங்கள் கட்சி எம்.பி.க்கள், இளைஞர் படையினர், மாணவர்கள் படையினர், மகளிர் படையினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து, இலங்கை அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இந்திய அரசு ஒப்புதல் தரும்.



உடனே, ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவெடுங்கள். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.
 
- அதிகாலை.காம் செய்தி.
 
 

Thursday, August 28, 2008

துதி பாடும் கூட்டம் எனை நெருங்காதைய்யா...: பதிவுலக அரசியல்.

வரவர தமிழ் பதிவுலகில் தனி மனித துதி மிகவும் தூக்கலாகப் போய்விட்டது. பதிவுகள் அனைத்தும் கருத்துக் களங்கள் தானே. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களோ அல்லது ஒத்த கருத்துக்கள் உடையவர்கள் ஒரு குழுவாகவோ இருந்தது போய் இப்போது பதிவுலகில் கூட பின்பற்றிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

கருத்துக்களை

படைப்பாளிகள் - வாசிப்பவர்கள்

ரசிப்பவர்கள் - வெறுப்பவர்கள்

ஆமோதிப்பவர்கள் - மாற்றுக் கருத்துடையோர்

என்பதெல்லாம் போய் ஒரு சில பதிவர்களைப் பற்றி இவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர் என்று புகழ்வது துவங்கி இருக்கிறது.

இது எதற்காக? நல்லதா? கெட்டதா?

இப்படியே போனால் எங்கே போய் முடியும்?

இப்போது வலைபதிவுகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என்பது போலத் தோன்றும். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு?

இன்னும் கொஞ்ச நாள் கழிச்ச பிறகு வலைப்பதிவு இல்லாத ஆட்களே இல்லை அல்லது வலைப்பதிவு இல்லாத மனிதர் அரை மனிதர் என்கிற நிலைமை வரப் போகின்றது! (கைப்பேசி வந்த புதிதில் அது இப்படி உலகை ஆக்கிரமிக்கும் என்று அதைக் கண்டுபிடிச்சவனே நினைச்சுக் கூட பார்த்திருக்கமாட்டான்). கலையுலக சூப்பர் ஸ்டார் கள் எல்லாம் கட்சி துவங்கி முதல்வர் பதவிக்கான களத்தில் இருப்பது போல, நமது வலையுலக சூப்பர் ஸ்டார்களும் கட்சி துவங்குவார்கள் போலத் தெரிகிறது. அப்படி துவங்கும் பட்சத்தில், இப்போது இவர்களைப் புகழ்ந்து வந்து கொண்டிருக்கும் பின்பற்றிகளின் பதிவுகள் அவர்களுடைய முதல்வர் பதவிக்கான தகுதியை சற்று தூக்கிக் கொடுப்பதாக அமையலாம். இப்போது புகழ்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பின்பற்றிப் பதிவர்கள் அமைச்சர்களாகவோ, வாரியத்தலைவர்களாகவோ, மாவட்டச் செயலாளர்கலாகவோ, வட்டம், ஒன்றியம் அல்லது வார்டு செயலாலர்களாகவோ வரும் வாய்ப்பு புகழ்ச்சியில் அவரவர் பங்களிப்பைப் பொறுத்து உள்ளது. சிறப்பாக புகழ்பவர்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன் ஆர்க்காடு வீராசாமி போலவோ அல்லது குறைவாக புகழ்பவர்கள் 143 வார்டு கவுன்சிலர் அஞ்சா நெஞ்சன் டில்லி பாபு (இவரும் அஞ்சா நெஞ்சன்தான் ) போலவோ வரும் வாய்ப்பு உள்ளது.

இப்போது முதல்வர் பதவிக்கு போட்டி போடும் நடிகர்கள் எல்லாரும் நடிகர்கள் என்று மட்டும் பார்க்கப் படாமல் நல்லவர்களாகவும் சித்தரிக்கப் பட்டவர்கள் தான். ஒரு பக்கம் ஊடகங்களாலும் மறுபக்கம் ரசிகர்களாலும்.

ஆகவே வருங்கால முதல்வர்களே, ஆர்க்காடு வீராசாமிகளே, டில்லி பாபுக்களே..சீகிரமே துண்டு போட்டு இடத்தைப் பிடித்து கொள்ளுங்கள்.

துதி பாடும் கூட்டம் எனை நெருங்காதையா..

பின் குறிப்பு: வலையுலக முன்னோடிகள் இந்த இடுகை எந்த வகையை சார்ந்தது என்று தெரிவிக்கவும். சீரியஸா? இல்லை மொக்கையா? வயத்தெரிச்சலா? இல்லை வருங்காலக் கணிப்பா?

Tuesday, July 1, 2008

கடவுச் சீட்டு கண்டெடுப்பு: அறிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்


புதுக் கோட்டை அரசர் குளத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு செந்தில் குமார் என்பவரின் கடவுச் சீட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாரின் பாஸ்போர்ட் giant Store அருகே கண்டெடுக்கப்பட்டதாக மின்னஞ்சலில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அரசர்குளத்தைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது இருந்தால் திரு. ஜின்னா அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Masood Jinnah, Purchaser_ uraija branch, Giant Stores ( RYD Uraija Branch ) Mobile 055 9949 234, phone: 01_4302727 EXT:119, fax: 01-4319292

இந்த கடவுச் சீட்டில் இரண்டே நாட்களுக்கு முந்தைய மறு நுழைவு முத்திரை உள்ளது.




Saturday, April 19, 2008

சவூதி அரேபியாவில் தமிழர் வாழ்வு நிலை. .

மின்னஞ்சல்களிலும் இணைய வலைப்பூக்களிலும் பறந்து வந்து, நெஞ்சைப் பதற வைக்கும் செய்தி.
நேற்றைய அதிகாலை.காம் செய்தியிலும் வெளி வந்துள்ளது. ஆனால் வளைகுடா நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மிகுதியாக வெளியிடும் மலையாள தொலைக்காட்சிகள் மூச்சே விடவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மலையாளிகள் இல்லை என நினைக்கிறேன்.
இந்திய அரசே! உடனே நடவடிக்கை எடு..
இந்திய தூதரகமே தவித்திடும் தமிழர்க்கு உதவிடு..
செய்தி பின் வருமாறு.
நன்றி: அதிகாலை.காம்
http://www.adhikaalai.com/index.php?/en/அதிகாலை-ஸ்பெஷல்/அதிகாலை-ஸ்பெஷல்/கலைஞருக்கு-கண்ணீர்-கடிதம்-கவனத்துக்கு-கொண்டு-செல்கிறது
நன்றி: வலைப்பதிவு நண்பர்கள்
http://abumuhai.blogspot.com/2008/04/blog-post.html
http://a1realism.blogspot.com/2008/04/blog-post_19.html

தமிழர்கள் .

Thursday, April 3, 2008

சவூதி அரேபியாவில் இந்தியர் என்பதால் அலட்சியமா? தமிழர் என்பதால் அலட்சியமா?

சவூதி அரேபியாவில் பணி புரியச் சென்ற தமிழக வாலிபர் காலை இழந்து திரும்பிய விபரீதம். இன்றைய தினமலர் நாளிதழில் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் உண்மையில் அதிர்ந்து போனது என் இதயம்.
பாதிக்கப்பட்ட வாலிபர் ஒரு இந்தியர், இரண்டாவது முஸ்லீம் அல்லாதவர், மூன்றாவது அவர் மலையாளி அல்லாதவர்.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரையில் மற்ற நாட்டவர்களை அவர்கள் நாடு எது என்பதை பார்த்தே அவருக்கு என்ன மரியாதை என்பதை தீர்மானிக்கிறார்கள். மிகவும் கீழ்த்தரமாக நடத்தப் படுபவர்கள் வங்க தேசத்தினர். இந்தியர்கள் பலர் பெரிய பதவிகளில் இருந்தாலும் நல்ல மதிப்பு என்பது கிடையாது. இதற்க்கு காரணம் இந்திய தூதரகம் சரிவர இயங்காததே காரணம். வளைகுடா நாடுகளில் அனைத்து தூதரகங்களிலும் மலையாளத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் மற்ற மாநிலத்தவர்களை இரண்டாம் பட்சமாக நடத்துவது தான். இது ஒட்டு மொத்தமாக இந்தியர்கள் என்றாலே மதிப்பைக் குறைக்கிறது. விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் நாடு வாரியாக வரிசையில் பிரிந்து நிற்கச் செய்வார்கள். இந்த மலையாளிகள் விமான நிலையத்தில் குடிமை புகும் பொது இந்தியர்கள் வரிசையிலே கூட நிற்க மறுக்கிறார்கள் :) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.இதில் மலையாளிகளைப் பற்றி ஏன் எழுதியுள்ளேன் என்றால் இங்கு எண்பது சதம் இந்தியர்கள் மலையாளிகளே. அவர்கள் கொஞ்சம் உதவி இருந்தால் இந்த தமிழக இளைஞருக்கு மருத்துவ உதவி இன்றி காலை எடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது..