Showing posts with label Dinamalar. Show all posts
Showing posts with label Dinamalar. Show all posts

Thursday, April 3, 2008

சவூதி அரேபியாவில் இந்தியர் என்பதால் அலட்சியமா? தமிழர் என்பதால் அலட்சியமா?

சவூதி அரேபியாவில் பணி புரியச் சென்ற தமிழக வாலிபர் காலை இழந்து திரும்பிய விபரீதம். இன்றைய தினமலர் நாளிதழில் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் உண்மையில் அதிர்ந்து போனது என் இதயம்.
பாதிக்கப்பட்ட வாலிபர் ஒரு இந்தியர், இரண்டாவது முஸ்லீம் அல்லாதவர், மூன்றாவது அவர் மலையாளி அல்லாதவர்.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரையில் மற்ற நாட்டவர்களை அவர்கள் நாடு எது என்பதை பார்த்தே அவருக்கு என்ன மரியாதை என்பதை தீர்மானிக்கிறார்கள். மிகவும் கீழ்த்தரமாக நடத்தப் படுபவர்கள் வங்க தேசத்தினர். இந்தியர்கள் பலர் பெரிய பதவிகளில் இருந்தாலும் நல்ல மதிப்பு என்பது கிடையாது. இதற்க்கு காரணம் இந்திய தூதரகம் சரிவர இயங்காததே காரணம். வளைகுடா நாடுகளில் அனைத்து தூதரகங்களிலும் மலையாளத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் மற்ற மாநிலத்தவர்களை இரண்டாம் பட்சமாக நடத்துவது தான். இது ஒட்டு மொத்தமாக இந்தியர்கள் என்றாலே மதிப்பைக் குறைக்கிறது. விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் நாடு வாரியாக வரிசையில் பிரிந்து நிற்கச் செய்வார்கள். இந்த மலையாளிகள் விமான நிலையத்தில் குடிமை புகும் பொது இந்தியர்கள் வரிசையிலே கூட நிற்க மறுக்கிறார்கள் :) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.இதில் மலையாளிகளைப் பற்றி ஏன் எழுதியுள்ளேன் என்றால் இங்கு எண்பது சதம் இந்தியர்கள் மலையாளிகளே. அவர்கள் கொஞ்சம் உதவி இருந்தால் இந்த தமிழக இளைஞருக்கு மருத்துவ உதவி இன்றி காலை எடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது..