Tuesday, December 7, 2010

இத்தனை நாளாய் ம.தி.மு.கவில் தான் இருந்தேன்: தாணு ஒப்புதல்!

பெரும்பாலான கறுப்பு ஆடுகள் களையெடுக்கப் பட்டுவிட்ட போதும் வெகு சில ஆடுகள் இன்னும் மந்தைக்குள் இருக்கத்தான் செய்கின்றன. அவை எவை என்பது மேய்ப்பனுக்கு நன்றாக தெரிந்தே இருக்கிறது. கூட்டமாகத் துரத்தியபோது செல்லாத ஒற்றைக் கருப்பாடு இப்போது வேடம் கலைத்திருக்கிறது.

கலைப்புலி தாணு அவர்கள் ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்ததில் இருந்து அவர் இத்தனை நாளாக ம.தி.மு.க.வில் தான் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தபோது பத்திரிக்கையாளர் சுதாங்கன் அவரை, நீங்கள் ம.தி.மு.க. வில் இருக்கிறீர்களா? எனத் துருவித் துருவிக் கேட்டபோதும் மழுப்பலான பதிலையே தந்தார். இப்போது என்னவோ தான் ம.தி.மு.க. வில் தான் இருந்ததுபோல விலகல் கடிதம் கொடுத்துள்ளார்.

வசந்தத்தின் தூதுவன் வைகோ இவருக்கு சட்டமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்ததையே கொச்சைப் படுத்தி, வைகோ இவரிடம் மட்டுமல்லாமல் இவர் வீட்டு உறுப்பினர்களிடமும் போய் கெஞ்சியதாகக் கூறியவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரை நிற்கச் சொல்லி கெஞ்சியதாக கூறுபவர் எப்படி இவரை வைகோ முன்னிலைப் படுத்தவில்லை என்று கூற முடியும்?

நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததே நான்கு இடங்கள். ஒன்றில் வைகோ வும், ஒன்றில் கணேசமூர்த்தி எம்.பி அவர்களும், ஒன்றில் முன்னாள் பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன் அவர்களும் மற்றதில் துணைப் பொதுச்செயலாளர் துரை பால கிருஷ்ணனும் போடியிட்டனர். இவர்களில் எவர் தகுதியற்றவர்? தகுதியுடையோர் எண்ணற்றவர்கள் இருப்பினும் இடம் கிடைக்காததுதான் குறை. இதில் இவர் சம்பத்துக்கு இடமளிக்கவில்லையென கேள்வி கேட்டாராம் வைகோ கோபித்துக் கொண்டாராம். நல்ல கற்பனை.

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடந்த பல போராட்டங்களுக்கு இவர் தலைமையேற்பார் என தலைமைக் கழகம் அறிவித்தும் போராட்டக் களங்களில் இவர் தலையே காட்டவில்லை. இவர் தலையே காட்டாத போது மீண்டும் மீண்டும் இவர் பெயரை முன்னால் போட்டு மூக்கறுபட முடியுமா?  மாநாட்டுக்கு அழைக்கவில்லையென குற்றம் சொல்கிறீர்களே? மாநாட்டுக்கு யார் அழைக்கவேண்டும்? வைகோ வந்து உங்கள் வீட்டில் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டுமோ? அப்படி வைகோ செய்தாலும், வைகோ என் வீட்டில் வந்து கெஞ்சி மாநாட்டுக்கு அழைத்தார் அதனால் போனேன் என்று கொச்சைப் படுத்த வாய்ப்பில்லாமல் போனதற்காக வருந்துகிறீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நீங்கள் கருணாநிதியிடம் விலை போய்விட்டது வைகோவிற்கும் தெரியும் ம.தி.மு.க. தொண்டனுக்கும் தெரியும் தாணு அவர்களே.

உங்களுக்கு உங்கள் தொழிலை நடத்த கருணாநிதியின் தயவு தேவை. சில நாட்களுக்கு முன் வெளிவந்த உங்கள் திரைப்படம் ஒன்றை கருணாநிதி குடும்ப ஊடக நிகழ்ச்சிகள் மூலம் தூக்கி நிறுத்தினீர்களே அது போல. அதைச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு போகிற போக்கில் வரலாற்று நாயகன் வைகோ மீது சேற்றை வாரி இறைப்பானேன்?

வைகோ அவர்கள் உங்களுக்கு செய்த உதவிகளில் பகுதியளவே எங்களுக்குத் தெரியும். முழு அளவும் உங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாணு அவர்களே.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

Tuesday, November 30, 2010

வலைப்பதிவர்களுக்கு வைகோ எச்சரிக்கை !!!

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த ஈகிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் கடந்த 27ம் நாள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு, மாநாடு போல நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் இணையத்தைப் பயன் படுத்துகிறவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட வைகோ அவர்கள், சில வலைப் பதிவுகளில் பதிவர்கள் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு ராசபக்சேவுக்கு உதவும் வகையில் செயல் பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தமிழ் வலைப் பதிவர்களும் இணையதளங்களைப் பார்வையிடும் தமிழர்களும் அவர்களை இனம் கண்டு புறக்கணிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்களும், அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் ஆற்றிய உரைகளை இறக்கம் செய்து முழுவதுமாக கேட்க பின்வரும் தொடுப்புகளை சொடுக்கவும்.

மாவீரர் நாள் 27-11-2010 அன்று

வரலாற்று நாயகன் வைகோ அவர்கள் பேச்சு பகுதி I

http://www.mediafire.com/?1cddj002pvxr1l7




வசந்தத்தின் தூதுவன் வைகோ பேச்சு பகுதி II

http://www.mediafire.com/?25ers82v0qcht92

மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பேச்சு

http://www.mediafire.com/?khade85j0ewrwgt

Monday, November 22, 2010

சென்னையில் நவ-27ல் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

எழுதியவர்: கவிஞர் புதுவை.ரத்தினதுரை

தமிழீழம் பெறும் நோக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகியரை நினைவுகூரும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்ப் இயக்கத்தின் சார்பில் நவம்பர் 27 சென்னையில் தியாகராய நகர் பேரூந்து நிலையம் அருகில், முத்துரங்கன் சாலையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டமும் நினைவஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. வசந்தத்தின் தூதுவன் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, ஆவடி மனோகரன், பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருக. தமிழுணர்வு பெறுக.

Thursday, November 18, 2010

காஞ்சி மாநாட்டில் வைகோ ஆற்றிய எழுச்சியுரை ஒலி வடிவில்

கடந்த செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கம் செய்க..

வைகோ உரை - பாகம் I
வைகோ உரை - பாகம் II
வைகோ உரை - பாகம் III
வைகோ உரை - பாகம் IV



 

Wednesday, November 17, 2010

பூமராங்காய்த் திரும்பும் அலைவரிசை ஊழல்: தப்பிக்குமா கருணாநிதி குடும்ப சாம்ரஜ்யம்?

கருணாநிதி இன்னும் நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். அவரது கண் முன்னாலேயே, அவர் கட்டியமைத்த, அவரது குடும்ப சாம்ராஜ்யம் சிதறி சின்னாபின்னமாவதைக் காணவாவது கருணாநிதி நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். இவை அண்ணா பிறந்த நாளில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. வின் மாநாட்டில் வசந்தத்தின் தூதுவன், வரலாற்று நாயகன் வைகோ எழுச்சியுரையின் போது குறிப்பிட்டவை.

சில காலம் முன்பு வரை கருணாநிதியின் குடும்ப சாம்ராஜ்யம் சின்னாபின்னமாக, கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதுமா  “இன்னும்” நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா என்ற அய்யம் இருந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான, விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் நீதித் துறையின் மீது மக்கள் வத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை முறையான காரணமில்லாமல் நீடித்து வருவதை தமிழர் இதயம் வைகோ அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்ததும், குறுக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியங்கள் பதிலளிக்கத் திணறியதும் நாடறிந்தது. இருந்தும் விசாரணையை ஒருதலைப் பட்சமாக நடத்தி முடித்து தீர்ப்பையும் வழங்கி விட்டது. வழக்கு விசாரணைகள் இதே கதியில் இருந்தால் இன்னும் நூறாண்டுகள் காத்திருந்தாலும் ஊழல் வழக்குகளின் கருணாநிதி குடும்பத்தினர் தண்டிக்கப் பட முடியாமலேயெ போய் விடுமோ என்ற எண்ணம் வந்தது.

நீதித் துறையின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயிருப்பதை சிலநாட்கள் நடை பெற்ற காவல் துறையின் செயற்கையான மோதல் கொலையை பெருவாரியான மக்கள் தவறென்றறிந்தும் ஆதரித்தலிருந்து அறியலாம். யாருமற்ற ஒரு ஒற்றை மனிதனுக்கு எதிரான குற்றங்களையே நிரூபணம் செய்து தண்டனை வாங்கித்தர இயலாத புலனாய்வுத் துறையும், நீதித் துறையும், ஊழலில் துறை போகிய கருணாநிதி குடும்பத்தின் கொட்டங்களை வெட்டவெளிச்சமாக்கி தண்டனை பெற்றுத் தருமா என்கிற அய்யம் அத்தனை தமிழர்கள் மனதிலும் உள்ளதை மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இவர்கள் கொடுக்கும் கையூட்டைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து மீண்டும் இவர்களையே பதவியிலமர்த்தும் மன ஓட்டம் மக்களுக்கு வருவதற்கு அடிப்படைக் காரணமே மேற்சொன்ன துறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்ததுதான். எப்படியும் இவர்களைத் தண்டிக்க முடியாது,  வேண்டுமளவு அவர்கள் எடுத்துக் கொண்டு நமக்குத் தந்தால் அவர்களையே ஆதரிப்பதில் தவறென்ன? அதிலும் இவர்கள்தான் தான் இலவசப் பிச்சைகளில் அனைவரையும் மிஞ்சியவர்கள் என்கிற மன நிலை மக்கள் மனதில் மிகுதியாகியுள்ளது.

ஆனால் தமிழக முதல்வர்கள் வரலாற்றில் ஓமந்தூரார் தொடங்கி ஜெயலலிதா வரையிலான முதல்வர்களில் தன் குடும்பத்தை அமைச்சர் பதவிகளிலும் கட்சிப் பதவிகளிலும் அமர வைத்து ஊழலைப் பரவலாக்கி, அதையே நியாயப் படுத்தி வருவதில் கருணாநிதிக்கு எவரும் நிகரில்லை. தமிழகத்தைத் தற்போது சூழ்ந்துள்ள ஆபத்து முன்னெப்போதும் இல்லாதது. எனவே இதனைத் தகர்க்கும் உத்திகளை புதிதாகவே வடிவமைக்க வேண்டியுள்ளது.

மக்கள் ஆற்றலின் மூலம் எத்தகைய ஊழல் பேர்வழிகளையும் தெருவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது மக்கள் தலைவர் மேடைதோறும் முழங்கி வரும் முழக்கமாகும். மக்களாற்றலைத் திரட்டவே கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைச் சந்தித்து ஊழல் பேர்வழிகளுகெதிராக மக்களைத்  திரட்டிவருகிறார்.
மக்களைத்   திரட்டுவது ஒரு வழியென்றால், இதே நோக்கமுள்ள மற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி ஆதிக்கவாதிகளின் சதிகளை முறியடித்து வெற்றி பெறமுடியும். பொதுவுடமை இயக்கங்களும் பா.ச.க.வும் எதிரெதிர் துருவங்களாயிருப்பினும் ஊழலுக்கெதிராய் ஒரே குரலில் ஒலித்த்தன் மூலமே இது சாத்தியமாயிற்று. மறுமலர்ச்சி தி.மு.க.வின் கூட்டணி தந்திரங்களும் இதையொட்டியே இருக்கும்.

அனைவரும் சொல்வதுண்டு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையில்லை, அவர்கள் சரியில்லை என்று. அலைவரிசை ஊழலைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகள் மக்களாட்சியின் மாண்பை உண்மையாக்கியுள்ளனர். ஆகவே தமிழர்கள் அனவரும் மக்களாட்சியின் மீதும், தலைவர் வைகோ மீதும் நம்பிக்கை வைத்து மறுமலர்ச்சி தி.மு.க. வுடன் கைகோர்க்க வேண்டும்.



அரசியல் தலைவர்கள் ஒன்றே முக்கால் லட்சம் கோடிகள் ஊழல் செய்த கொள்ளைக்காரனை பதவி நீக்கம் செய்ய வைத்திருக்கிறார்கள். இப்போது பந்து புலனாய்வுத் துறை மற்றும் நீதித் துறைகளின் கையில். அரசியல் தலைவர்களும் நீதி கிடைக்கும் வரை ஓய்ந்து விடக் கூடாது.

கொள்ளைக் காரனைப் பதவி நீக்கம் செய்தால் மட்டும் பத்தாது, ராசா உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். மோசடி செய்த சத்யம் நிறுவன தலைமை அதிகாரி சிக்கியவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இப்படிப் பட்ட மோசடிப் பேர்வழிகளின் துணிச்சலே மோசடி செய்த பணத்தை வைத்தே தப்பி விடலாம் என்பதுதான். இல்லையென்றால் பதவிக்கு வந்தவுடன் முடிந்தவரை கொள்ளையடித்து விட்டால் பின்னர் பதவி போனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விடும்.

கொள்ளையடித்த பணத்தில் கருணாநிதியின் குடும்பத்திலும், தி.மு.க.விலும், காங்கிரசிலும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு சென்றது என்பதைக் கண்டறிந்து சிறையிலிட வேண்டும். இவர்களை சிறையிலிட்டால் மட்டுமே விசாரணையில் இவர்கள் தலையீடின்றி செவ்வனே செய்ய இயலும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் எவ்வளவு கோடிகள் செலவிடப் பட்டது. கொள்ளைப் பணத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கருணாநிதி கட்டியமைத்த குடும்ப சாம்ராஜ்யம் அவரது கண்முன்னே தூள்தூளாக வேண்டும்.

Wednesday, July 21, 2010

வலைப் பதிவர் சவுக்கு கைது! கருணாநிதி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

தமிழ் வலைப் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் சவுக்கு. இவர் கருணாநிதி அரசின் தமிழர் விரோதப் போக்கைத் தோலுரித்துக் காட்டியதுடன், தமிழக அரசு தனது எந்திரங்களை எவ்வாறெல்லாம் தனது தன்னலத்திற்காகவும் மக்களுக்கெதிராகவும் திருப்பி விடுகிறது என்பதை தனது பதிவுகள் மூலம் அக்கு வேறாகவும், ஆணி வேறாகவும் பிய்த்து தனது வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் படிப்போர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் தனது வலைப் பதிவில் கருணாநிதி அரசுக்கு கவுண்ட் டவுன் பகுதியை வெளியிட்டுள்ளார்.
http://www.savukku.net/

கருணாநிதியின் தமிழர் விரோதப் போக்கைப் புள்ளி விபரங்களுடன் விவரித்து வந்தார்.

இணைய உலகில் கருணாநிதியை அனைவரும் காரி உமிழ்ந்து வருவது அனைவரும் அறிந்த்ததே. இணைய உலகில் எழுந்து வரும் எதிர்ப்புகளைப் பொறுக்க மாட்டாத கருணாநிதி அரசு தன் ஏவல் துறையை ஏவி எழுத்தாளர் சவுக்கைக் கைது செய்து தன் கையாலாகாத் தனத்தைக் காட்டியுள்ளது. எழுத்தாளர் சவுக்கு, இணையத்தில் மட்டுமல்லாது அனைத்து பத்திரிக்கைத் துறையிலும் தொடர்பு வைத்துள்ளவர். இவரது கைது எழுத்துரிமைக்கு விடப்பட்ட பெரும் சவால். தானும் எழுத்தாளர், கவிஞர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி தனக்கு எதிராக வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு பதறுவது ஏன்?

கருணாநிதியின் இத்தகைய செயலைக் கண்டு அனைத்து வலைப் பதிவர் களும் கொதித்து போயுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் சவுக்கு அவர்களின் வலைப்பதிவில் இருக்கும் கவுண்ட் டவுன் போல கருணாநிதியின் நாட்கள் எண்ணப் பட்டு வருகின்றன. அது சுழியை எட்டும் போது கருணாநிதி ஆட்சியில் இருக்கப் போவதில்லை. அவர் இருக்குமிடம் சவுக்கு இப்போது இருக்கும் சிறையறையாகக் கூட இருக்கலாம்.

Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டைத் தாக்குவதா? தமிழினத் துரோகி கருணாநிதிக்கு கண்டனம்

பச்சைத் தமிழர் பழ.கருப்பையா நல்ல தமிழில் பேசக் கூடியவர். தனித்தமிழில் பேசியும் எழுதி வந்தவர். செட்டிநாட்டு பின்புலத்தில் இருந்து வந்து தமிழர் பண்பாட்டை பாரறிய பரப்பி வந்தவர். தமிழினத் துரோகி கருணாநிதியின் கயமைத் தனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களிலும், தொலைக்கட்சிகளிலும் கருத்துரை வழங்கிவந்தார். அவருடைய கருத்துரைகள் தமிழ் மக்களையெல்லாம் வெகுவாக ஈர்த்துவந்தது.




இந்நிலையில் கருணாநிதியின் கபட வேடங்களையும், செம்மொழி நாடகத்தையும் பற்றி பகிரங்கமாக நேர்காணலிலும், கட்டுரைகளில் எழுதி வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி கும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மக்களாட்சியின் மீது அக்கறை கொண்ட எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இந்த செயல் கருணாநிதியின் அழிவையே காட்டுகிறது.



மக்கள் விரோத கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஆட்டோ வருமா? அல்லது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவு விரைவில் வருமா?

Friday, June 18, 2010

கருணாநிதியின் மாநாட்டை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

தான் நடத்தப் போகும் மாநாட்டிற்காக கருணாநிதி எழுதியிருக்கும் பாடல் ஒரு கேலிக் கூத்து. அவரது கட்சியில் கூட சில சில்லரைக் கவிஞர்கள் உள்ளனர். அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு இவர் பேசாமல் நடிகைகளின் விண்ணப்பங்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்திருக்கலாம். அதை விடுத்து தன் பெயரை முன்னிலைப் படுத்த வேண்டுமென்பதற்காக கவிதை எழுத கிளம்பிவிட்டார்.

சரி வந்ததுதான் வந்தார், சொந்தமாக எழுத ஒரு வரி கூடவா கிடைக்கவில்லை. இவர் எழுதிய கவிதை அப்படியே ஆறாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் உள்ளடக்கம் பகுதியில் வருவது போல இருக்கிறது. பாடப் புத்தகத்தின் உள்ளடக்கம் பகுதியில் தான் புத்தகத்தின் உள்ளே என்ன உள்ளது என்பதை பக்க வரிசையுடன், பாடல்களின் தலைப்பு அல்லது முதல் வரி குறிப்பிடப் பட்டு இருக்கும். பக்க எண்களை நீக்கிவிட்டு படித்தால் அது கவிதையாகி விடுமா? ஏதேனும் பொருள் தருமா? அது போலவே சில பாடல்களின் முதல் வரியைக் காப்பியடித்து பக்கத்தை நிரப்பி பொருளற்ற வகையில் பாடல் இயற்றி, அதற்காக பாராட்டுக்களை வாங்கிக் குவித்துள்ளார் இந்த இலக்கிய பயில்வான்.

செம்மொழி தமிழை வாழ்த்திப் பாடிய பாடலில் பொருளே இல்லை. தமிழ் எப்படி செம்மொழியாகும் தகுதியுடையது என்பதை விளக்கும் வரிகளே இல்லை. இது இப்படி இருக்க தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதிலாக இப்பாடல் இடம்பெறுமாம். மனோன்மனீயம் சுந்தரனார் அவர்களால் சுயமாக சிந்தித்து தமிழின் தொன்மை பெருமைகளைக் குறித்துப் பாடப்பட்ட ”நீராறும் கடலுடுத்த” என்ற பாடலுக்கு எந்த வகையில் இவர் பாடல் நிகராகும். இதற்காக ஒரு பாராட்டு விழாவா? நாமும் பாராட்டி விடுவோம். இதன் மூலம் இவர் காப்பியர் கருணாநிதி என்றழைக்கப் படுவாராக.



தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் அழித்தொழித்து விட்டு அனைத்து இடங்களிலும் தன் பெயரும், அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் தன் குடும்பத்தினர் பெயர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல் பட்டு வரும் கருணாநிதி நடத்தப் போகும் இந்த மாநாடும் அதற்கான இன்னொரு முயற்சிதான்

அண்ணாவால் துவக்கப் பட்ட இயக்கத்தை தன் குடும்பம் என்கிற ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட கருணாநிதி இப்போதெல்லாம் மேடைகளில் அண்ணா பற்றி அதிகம் பேசுவதில்லை. அவரே அப்படியென்றால் மற்றதுகள் என்னவோ தி.மு.க.வைத் தோற்றுவித்ததே கருணாநிதி என்கிற தொனியிலேயே பேசி வருகின்றன. அண்ணாவின் நூற்றாண்டான கடந்த ஆண்டு சிறிய அளவில் கூட்டம் நடத்தி முடித்து கொண்டது க.தி.மு.க.(கருணாநிதி தி.மு.க.)

இப்படி தி.மு.க. என்கிற இயக்கத்தைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் பெயரையே இருட்டடிப்பு செய்து தன் பெயரை முன்னிலைப் படுத்தி வரும் கருணாநிதி சில நாட்களுக்கு முன் செய்த ஒரு அடாத செயல் தமிழக சட்ட மன்றக் கட்டிடம் கட்டியது. திறப்பு விழாவிற்கு முன்பாக பீகார் தொழிலாளர்கள் எல்லாம் சும்மா என்பது போலும் தானே கல் சுமந்து கட்டி முடித்தது போலும் தோற்றத்தை ஏற்படுத்த காலையில் எழுந்தால் ஓமந்தூரார் தோட்டம், மாலையில் அடைந்தால் ஓமந்தூரார் தோட்டம் என்று காட்சியளித்தார். கட்டிடம் மேலெழுந்து வர வர அனைத்து மக்களும் முகம் சுழிக்கும் வகையில் ஒரு அவமானச் சின்னம் போல, எண்ணெய் தொட்டிபோல வடிவத்தில் வந்து நின்றது. இன்னும் கட்டி முடிக்கப் படவில்லை. திறப்பு விழாவிற்காக அவசர கோலத்தில் ஒப்பனை செய்யப் பட்ட அந்த கட்டிடம் இப்போது ஒப்பனை கலைக்கப் பட்டு காணச் சகிக்காத வகையில் வேலை நடந்து கொண்டு வருகிறது. தன் பெயரில் வர வேண்டுமென்பதற்காக அவசரம் அவசரமாக ஒப்பனை செய்யப் பட்ட கட்டிடத்தில் மீண்டும் முதலில் இருந்து பணிகள் துவக்கப் பட்டுள்ளன. அழித்து அழித்து விளையாட இது என்ன சிறு பிள்ளை விளையாட்டா?

 இதில் என்ன கொடுமையென்றால் கட்டிடத்தில் துளியளவும் தமிழர் கட்டிடக் கலையோ, திராவிடக் கட்டிடக் கலையோ இல்லாமல் போனதுதான். எங்கேயோ சீனாவில், இந்தோனேசியாவில், வியட்னாமில், மற்றும் கீழைத் தேயங்களிலெல்லாம் தமிழர் கட்டிடக் கலையில் சோழர் கட்டிய கட்டடங்களை இப்போது காணும் போதும் பெருமை கொள்கிற நாம் தமிழகத்தின் தலை நகரில், அரசு தலைமைச் செயலகத்தைத் தமிழர் கட்டடக் கலையைப் புறந்தள்ளி வெட்கித் தலை குனியும் வகையில் ஒரு அவமானச் சின்னமாக்கி மக்கள் பணத்தை வீணடித்துள்ளார் இந்த கருணாநிதி. கட்டிட மேஸ்திரி கருணாநிதி இப்போதெல்லாம் அங்கு வருவதேயில்லையாம்.


செய்தித்தாள்களின் பசிக்குத் தீனி செய்திகளா? அல்லது மக்கள் பணத்தில் அரசு வழங்கும் பக்கம் பக்கமாக வெளிவரும் விளம்பரங்களா? இப்போதெல்லாம் மக்களாட்சியின் நான்காம் தூண்களான செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்கள் பிரச்சினையை, அரசின் ஊழலை, முறைகேடுகளை வெளியிட முன் வருவதேயில்லை. அப்படி வெளியிட்டால் அரசு விளம்பரங்கள் பெற்று கல்லாக் கட்ட முடியாது. நான்கு வரியில், சிறிய அளவில், கருப்பு வெள்ளையில், வெறும் எழுத்துக்களில் ஒரு ஒரு விளம்பரம் என்றாலே ஆயிரக் கணக்கில் வசூலிக்கும் செய்தித்தாள் நிறுவனங்கள் பக்கம் பக்கமாய் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு எத்தனை கோடிகள் வசூலிக்கும். இதில் தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் முரசொலியின் மறு பதிப்பாகவே வெளிவருகின்றன. கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தினத்தந்தி நாளிதழுக்கு அரசு செலுத்திய விளம்பரக் கட்டணம் மட்டும் நாலாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று பத்திரிக்கைத் துறை நண்பர் வெளியிட்ட தகவல் அதிர வைக்கிறது. இது உண்மையானால் தினத்தந்தி முரசொலியின் மறு பதிப்பென்ன, கருப்பு சிவப்பு கறையுடனே வரலாம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. இப்போது கருப்பு சிவப்பு கறையுடன் வெளிவந்தால் அடுத்த ஆண்டு ஆட்சி மாறும் போது கறையை மாற்றும் சூழல் வரும்போது சங்கடமாகி விடாதா?


இந்த மாநாடு அறிவிக்கப் பட்ட நேரமும், நோக்கமும் என்ன? இந்திய அரசாலும், இலங்கை அரசாலும் அங்கே ஈழத்தில் தமிழ் மக்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப் படுகிறார்கள். இந்திய அரசில் பங்கு வகிக்கும் கருணாநிதி அதனைக் கண்டு கொள்ளாமல் உடந்தையாக இருந்ததுடன், தமிழகத்தில் தன்னெழுச்சியாக உருவான போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலும் திசை திருப்பும் வகையிலும் போலிப் போராட்டங்களை நடத்தி தமிழர் ஒன்றுபடுவதைத் தடுத்தார். முடிவில் போர் முடிந்தது. கருணாநிதியின் துரோகத்தால் ஏராளமான தமிழர்கள் செத்து மடிந்தனர். தான் செய்த துரோகத்தை மறைக்கவும், தனக்கு கிடைத்த புதிய பட்டமான தமிழினத் துரோகி என்கிற பட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நப்பாசையில் மக்களை ஏமாற்ற போட்ட முகச் சாயம் தான் மாநாடு. மழை பெய்தால் நரியின் சாயம் வெளுத்துப் போகும். நாட்டாமை பதவியும் போகும்.


இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்தவர்கள் அதற்கு ஊழல் பரவலாக்கும் மாநாடு என்று வைத்திருந்தால் சாலப் பொருத்தமாக இருந்திருக்கும். ஊழலில் ஊறித் திழைக்கும் கேடுகெட்ட கூடாரம் தன் பரிவாரங்களையெல்லாம் ஒரு பந்தலின் கீழ் அழைத்து வந்து, எங்களுக்கு திகட்டி விட்டது, நீங்களும் கொஞ்சம் அடிச்சுக்கோங்க அப்படினு 1000 கோடி அரசுப் பணத்தை (மக்கள் பணத்தை) ஒதுக்கி பந்தி வைக்கிறது. பரிவாரங்களுக்கு பந்தி வைக்க வேண்டுமென்றால் ஊழலில் சேர்த்த பணத்தில் இருந்து கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் குடும்பக் கருவூலத்தில் குறைவு ஏற்பட்டு விடாதா? ஆகவே தன் அடி வருடிகளை எல்லாம் பல்வேறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இத்தனை கோடிகள் ஒதுக்கீடு, உங்களால் முடிந்தவரை அடித்துக் கொள் என்று மக்கள் பணத்தை பங்கு வைக்கிறது. இவனுங்களுக்கு திறமையிலா பஞ்சம். சும்மா போட்டுத் தாக்குகிறானுங்க. இதிலே வேடிக்கை பார்க்கப் போகும் சாதா தமிழனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? டவுசர் கிழிவதுதான் மிச்சம்.

Tuesday, May 18, 2010

முத்துக்குமாருக்கு சிலை அமைக்கத் தடை விதிப்பதா?: வைகோ கண்டனம்.

ஈழத் தமிழருக்காகத் தன் இன்னுயிரையே ஈகம் செய்த முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதைத் தடுத்த தமிழக அரசுக்கு  வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியும், படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு அதில் பங்கேற்றவர்களைக் கண்டித்தும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசிய போது மாவீரன் முத்துக் குமாருக்கு சிலை வைக்கத் தடை விதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிலை வைக்க அனுமதி மறுத்ததற்கு கருணாநிதியின் உண்மை முகத்தைத் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியதாலே தான் எனவும் தெரிவித்தார்.

வைகோ அவர்களின் முழு உரையைக் கேட்க இங்கு அழுத்தவும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரைகள் (ஒலி வடிவில் இணைப்பு)

கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலியும், படுகொலைக்கு காரணமானவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய பொதுக் கூட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் உரையாற்றினர். உரை ஒலி வடிவில் கீழே தரப்பட்டுள்ளது..

பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை...

பதிவிறக்கம் செய்ய

வைகோ அவர்கள் ஆற்றிய உரை...

1. பதிவிறக்கம் செய்ய
2. பதிவிறக்கம் செய்ய

வைகோ அவர்கள் உரையாற்றி முடிக்க இருந்த நேரத்தில் காவல்துறை குறுக்கிட்டு கூட்டத்தை முடித்துக் கொள்ள வற்புறுத்தினர். ஏற்கனவே வைகோவின் எழுச்சி மிகு உரையால் உணர்வின் விழிம்பில் இருந்த கூட்டம், காவல் துறை தலையீட்டால் கடும் கோபமடைந்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கூட்டத்தினரால் தாக்கப் பட்டுவிடும் சூழல் ஏற்பட்டது. வைகோ தலையிட்டு கூட்டத்தினரை கட்டுப் படுத்தியதுடன் மேலும் சில நிமிடங்கள் உரையாற்றி விட்டு கூட்டத்தை முடித்து வைத்தார். வைகோவின் சொல்லுக்கு கட்டுப் பட்டு கூட்டம் அமைதியடைந்ததை காவல் துறையினரே பாராட்டினர்.

Friday, May 7, 2010

சுடச் சுட: இது உங்கள் குரல் தான் திரு.ஆ.ராசா அவர்களே.. (ஒளிப்படம் இணைப்பு)

தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, நிரா ராடியாவுடன் பேசியது என்ன? என்பது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே செய்தியில் வெளியான ரகசிய ஒலி நாடா வெளியாகியுள்ளது. It's Your Voice Mr.Raja. என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி தொகுப்பு வெளியிடப் பட்டுள்ளது.




இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால்,


1. மற்ற எவரை விடவும் கனிமொழி ராசாவுக்கு பதவி கிடைக்க வேண்டுமென்று தீவிரமாக முனைந்துள்ளார்.

2. அழகிரி மற்றும் தயாநிதிக்கு என்ன துறை வழங்க வேண்டுமென்பதை ராசா தீர்மானிக்கிறார்.

3. டி.ஆர். பாலுவை நீக்குவது பற்றியும் பேசுகிறார்.

4. மூன்று குடும்ப உறுப்பினர்களையும் திருப்தி படுத்துவது சிரமம் என்கிறார் ராடியா. இவர் இளிக்கிறார். அழகிரி மகன், தயாநிதி பேரன் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் ஆ.ராசா கருணாநிதிக்கு என்ன உறவு?
தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கிறது. ஒலி நாடாக்கள் வெளிவர வெளிவர இங்கு தொடர்ந்து வெளியிடப் படும்.

இந்த ஒலி நாடாவில் தயாநிதி எந்த சூழ்நிலையிலும் தொலை தொடர்பு துறைக்கு வரக்கூடாது என்கிறார் கனிமொழி..


 

சுடச் சுட: இது உங்கள் குரல் தான் திரு.ஆ.ராசா அவர்களே.. (ஒளிப்படம் இணைப்பு)

அடுத்துள்ள பதிவில் கனிமொழி ஒலி நாடாவும் இணைத்து வெளியிடப் பட்டுள்ளது. பின்வரும் இணைப்பை அழுத்தவும்.

http://pongutamilar.blogspot.com/2010/05/blog-post.html

Saturday, April 24, 2010

கண்டன உண்ணாநோன்பில் வைகோ மற்றும் பழ நெடுமாறன் உரை (ஒலி இணைப்பு)

தமிழன்னை பார்வதியம்மாளை சென்னையில் நுழைய அனுமதி மறுத்த கருணாநிதி அரசைக் கண்டித்து சென்னையில் 22-04-2010 அன்று நடைபெற்ற மாபெரும் உண்ணா நோன்பில் பழ.நெடுமாறன் இரு முறையும் வைகோ அவர்கள் இரு முறையும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் வைகோ ஆற்றிய நிறைவுரை ஒலி வடிவில் பின் வருமாறு..

வைகோ அவர்கள் முதலில் உரையாற்றும் போது விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விளக்கினார்.பின்னர் வைகோ அவர்கள் ஆற்றிய நிறைவுரை



தரவிறக்கம் செய்ய

முன்னதாக பழ.நெடுமாறன் அவர்கள் விமான நிலையத்தில் நடந்தது பற்றி ஆற்றிய   விளக்கவுரை.




தரவிறக்கம் செய்ய

பின்னர் இரண்டாம் முறை பழ நெடுமாறன் அவர்கள் உரையாற்றும் போது கருணாநிதி குட்டிமணியை இலங்கை அரசிடம் காட்டிக் கொடுத்தது உட்பட செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பேசினார்.

Tuesday, April 20, 2010

முல்லைப் பெரியாறும் கையாலாகாத கருணாநிதியும்

முல்லைப் பெரியாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதில் கேரள அரசு எவ்வளவு முனைப்புக் காட்டுகிறது என்று பார்க்கும் போது மக்கள் இயக்கத்தின் மகத்துவம் நமக்கு புலப்படுகிறது. மக்கள் இயக்கத்தின் மகத்துவம் என்று பேசுகிற வேளையில், கேரள அரசின் செயல்பாட்டை காணும்போது இதிலும் புகுந்து செயற்கையாய் ஒன்றை உருவாக்க முடியும் என்றென்ண்ணுகிற போது அடப் பாவிகளா? என்ற அங்கலாய்ப்புதான் தோன்றுகிறது.







முல்லைப் பெரியாறு அணைக்கட்டு தமிழகத்தின் மலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் ஆங்கிலேய அரசு மற்றும் அக்கால ஆற்காடு வீராசாமி போன்ற மங்குனி மந்திரிகளாலும் பக்கத்து நாட்டிடம் பகிர்ந்துகொள்வோம் என்ற அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப் பட்டு 900 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பெறப் பட்டு தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களான மதுரை, கம்பம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற பகுதிகளின் பாசன தேவை நிறைவேற்றப் பட்டு வந்துள்ளது. முல்லைப் பெரியாறின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அத்தனையும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு வழக்கை பொறுத்த வரையில் நீதியை நிலைநாட்டவேண்டிய உச்ச நீதிமன்றம் கேரள அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என வடிவேலு பாணியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதாவது 152 அடிஉயரமுள்ள நீர்த்தேக்கத்தில் 142 அடி நீரத்தேக்கிவைத்துக் கொள்ளலாம் என்று. இந்த அளவிற்குக் கூட மனமிறங்காத மலையாள அரசு அணைக்கட்டு பகுதியில் உல்லாச விடுதிகள் கட்டி வைத்துள்ள தொழிலதிபர்களின் நிர்ப்பந்தத்திற்கு கட்டுப் பட்டு நீரளவை உயர்த்த ஒத்துழைக்காததுடன் ஒரு நயவஞ்சக சட்டத்தை இயற்றி இந்திய ஒருமைப் பாட்டிற்கு வேட்டு வைத்துள்ளதுடன் உச்ச நீதி மன்றத்தில் ஏற்கனவே வழங்கப் பட்ட தீர்ப்பை முடக்கியுள்ளது.

கேரள அரசு இத்தனை செய்தும் தமிழக அரசு தன் பொறுப்பை உணராமலும், தட்டிக் கழிக்கும் வகையிலும் ஒரு செயலற்ற கையாலாகாத அரசாக வெறுமனே வேடிக்கை பார்த்து வருகிறது.

கேரள அரசு இதுவரை இந்த வழக்கில் முன்னேறிச் செல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். கேரள முதல்வர் வெறுமனே வழக்கை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைத்துவிட்டு நடிகைகளின் ஆட்டம் பார்க்கவும், நடிகர்களின் பாராட்டு விழாவில் மூழ்கித்திழைக்கவும் இல்லை. மாறாக இதனை ஒரு மக்கள் போராட்டமாக போலியாகவேனும் எடுத்துச் சென்று அதனை உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் அழுத்தமாகத் தந்து வெற்றி பெற்றுள்ளார்.

மலையாளிகளின் போராட்டத்தை போலியான, கணிப்பொறி மூலம் உருவாக்கப் பட்ட வரைகலைப் படங்களின் உதவியோடு மாநில அரசே மக்கள் மனதில் ஒரு பாதுகாப்பற்ற சூழ்லை உருவாக்கி அவர்களை போரடச் செய்து அந்த போராட்டங்களையே மத்திய அரசுக்கும் உச்ச நீதி மன்றத்திற்கும் அழுத்தமாகத் தந்து காரியம் சாதித்து வந்துள்ளது. இனியும் அவ்வாறே செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடப்பதென்ன? மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவாகும் போராட்டங்களை திட்டமிட்டு தடுப்பதுடன் அது பற்றிய செய்திகள் வெளிவந்தால் எங்கே தான் காலில் விழுந்து கிடக்கும் தன் எஜமானர்கள் கோபித்துக் கொண்டு விடுவார்களோ என்றெண்ணி இருட்டடிப்பு செய்து மக்கள் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் கேடுகெட்ட செயலில் கருணாநிதி அரசு இறங்கியுள்ளது.

இதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் தற்போது நடைபெறும் பார்வதியம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளலாம். எங்கே வைகோவும் பழ.நெடுமாறனும் பெயர் வாங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று எண்ணி அந்த மூதாட்டியை சிகிச்சை பெற விடாமல் திருப்பி அனுப்பி அதில் ஆனந்தப் பட்டுக் கொள்ளும் கேடு கெட்ட செயலைப் போலவே முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழர் நலன் காக்கும் போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது இந்த கருணாநிதி கும்பல். செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டு தமிழர் நலனைக் காத்திருந்தால் மக்கள் போராட வேண்டிய அவல நிலையே வந்திருக்காதே?

இந்த சூழ்நிலையில் மே 28 ல் மதிமுக மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே பல்வேறு நிலைகளில் மக்களின் பேராதரவுடன் முல்லைப் பெரியாறு பாதுகாப்பு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள மதிமுக இந்த போராட்டத்திலும் வெற்றி பெறும் என்பதில் அய்யமில்லை.

பணம், பதவி, பட்டம், துரோகம், திருமா, கருணா

கலியுகத்தின் கடைசிச் சோழனின் தாய், தாய் தமிழகத்தில் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பப் பட்டதன் மூலம் மானமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் காயடிக்கப் பட்டு விட்டது. இது ஒன்றும் நமக்கு புதிது இல்லையே. ஒவ்வொரு தடவையும் தமிழா? மற்றதா? தமிழனா? மற்றவனா? என்ற கேள்வி வரும் போதெல்லாம் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதிக பட்சமா நாம் என்ன செய்வோம். இந்த வலைப் பதிவர்களுக்காவது ஒரு வழி இருக்கு. ஒரு கண்டனப் பதிவு போடலாம். கருணாநிதி, சோனியா, திருமா, ராஜபக்ச, மன்மோகன், சிவசங்கர மேனன், இன்ன பிற இத்யாதி துரோகிகளையும் ஒட்டு மொத்தமா திட்டி தீக்கலாம். இதனால் ஒரு பொது இடத்துல அவங்கள நிக்க வச்சு இந்த உலகத்துக்கே கேக்கிற மாதிரி கத்தி அவர்களின் துரோகத்தை சொல்லி, அவனுங்க மூஞ்சில காரித் துப்பி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தி, கட்ட வெளக்குமாறால சாத்தி, பிஞ்ச செருப்பால விளாசி தங்கள் கோபத்த தணிச்சுக்கிட்ட ஒரு திருப்தி கிடைக்குது. சில பேருக்கு இப்படி எழுதும் போது எல்லாத்தையும் நினச்சுப் பாக்க வேண்டியிருக்கதால இன்னும் அதிகமாக போகிற நிலமையும் இருக்கு. ஆனா சாதாரணப்பட்ட மனுசன் என்னசெய்வானு நெனச்சுப் பாத்தா நெஞ்சடைக்குது. அவனால எதுவுமே செய்ய முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. பதிவர்களைப் போல் இவர்களால் மேற்சொன்ன செய்கைகளின் மூலம் வடிகால் தேட முடியாது. ஏனென்றால் அந்த பட்டியலில் வரும் அத்தனையும் பதவியில் அதிகாரத்தில் இருக்கின்றன. ஏற்கனவே தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும், பழகும் தன்மை (Interpersonal Skills) படு மோசமாக இருக்கிற காரணத்தால் யாருக்கிட்டேயும் இது பத்தி பேசுவதும் இல்லை. ஒருவேளை பேசியே ஆகணும்னு வந்தாக் கூட மற்றவர் யாருன்னு பாத்துதான் பேச வேண்டியிருக்கிறது. இவர்கள்தான் கட்சி, கழகம், சாதி, இயக்கம் என அணி அணியாக பிரிந்து கிடக்கிறார்களே? இம்மியளவும் கருத்தொற்றுமையோ, சகிப்புத்தன்மையோ கிடையாது. இதெல்லாம் இருந்தால் ஒரே கொள்கைக்காக ஒராயிரம் கட்சிகள் வர வேண்டிய அவசியமென்ன? அகம் பிடித்தவர்கள். யாரையும் யாரும் நம்புவதில்லை. யாரையும் யாரும் நம்ப முடிவதில்லை. யார் சொன்னதையும் யாரும் கேட்பதுவுமில்லை, கேட்க முடிவதுமில்லை. ஏங்க கட்டின பொண்டாட்டிகிட்டே கூட இதே நிலமைதான். இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கு இலங்கையில் 2008 முதல் 2009 மே வரையும் இன்னமும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். இன்றைக்கு கூட தாய் பார்வதியம்மாளுக்கு ஒரு கொடுமை நடந்திருக்கிறது. காமச் சாமியார்கள் கக்கா போவதையெல்லாம் கள்ளத்தனமாகப் படமெடுத்து மணிக்கு இரு தடவைகள் ஒளிபரப்பி முகம் சுளிக்க வைத்தன சன் தொலைக்காட்சியும் கலைஞன் தொலைக்காட்சியும். ஆனால் தமிழன் சார்ந்த, தமிழினம் சார்ந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து பிற ஊடகங்களோடு தொடர்பில்லாத சாதாரண தமிழனை மழுங்கடிக்கின்றன. இந்த கேடுகெட்ட தொலைக் காட்சிகளை நம் வீட்டு தொ.கா. பெட்டியிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று சொன்னால் கட்டின பொண்டாட்டி கூட கேட்பதில்லை. தனியாக பேசும் போதெல்லாம் நல்லாத்தான் பேசுகிறாள். ஈழத் தமிழன் நிலமையும் இங்குள்ள தமிழன் நிலையையும் எடுத்துச் சொல்லும் போது அருமையாகக் கவனிக்கிறாள், அனுதாபத்தோடு உச் கொட்டி கேட்கிறாள். ஆனால் இதுக்கெல்லாம் பேசுகின்ற நேரம் மின் தடைஏற்பட்டிருக்க வேண்டும். (மின் தடை இருந்தால் மட்டுமே தனிப் பேச்சு என்பது வேறு சோகம்) மின்சாரம் திரும்பிவிட்டால் மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளம் போல தொ.கா. பெட்டிதான். தொடர்கள்தான். அப்ப அவனுக்கு ஓர்மையிருந்தால் தேர்தலில் வாக்களிக்கும்போது தமிழின விரோதிகளை புறக்கணித்து தமிழின நலம் விரும்பிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் வடிகால் தேடலாமே என்று சொல்வது புரிகிறது. தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. மன்னிக்கவும். அதுவரை அவனுக்கு ஓர்மையிருப்பதில்லை. மேலும் அங்கேயும் ஒரு கோடரிக் காம்பு இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க பிரபாகரன் படத்தைப் பரப்பிக் கொண்டு உட்காந்திருக்கிறது. நாந்தான் எல்லாம், நாந்தான் எல்லாம் என்கிறது. கனிமொழி சகிதம் ராஜபக்சேவிடம் பல்லிளிக்கிறது. டக்ளசிடம் நலம் விசாரிக்கிறது. வேலுப்பிள்ளை இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு திரும்புகிறது. முத்துகுமார் என் தம்பி என்கிறது. சாகும் முன் என் பெயரைச் சொன்னான் என பெருமைப் பட்டுக் கொள்கிறது. திருமா துரோகம் செய்யாதே என்று சொல்ல வந்ததைக் கூட தனக்கு விளம்பரமாக செய்து கொள்கிறது. பார்வதியம்மாளுக்கு இவ்வளவு நேர்ந்த பின் எனக்கு எல்லாம் தெரியும் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி வந்தது, மலேசியாவில் இருந்து அலைபேசி வந்தது என்கிறது. எங்கே பழ.நெடுமாறன் அவர்களும் வைகோ அவர்களும் பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்களோ என்றெண்ணி மருத்துவச் சிகிச்சைக்காக வந்த அம்மாவைத் திருப்பி அனுப்ப கூட்டாளி கருணாவுடன் கலந்துரையாடி காரியமாற்றிவிட்டு, வெளியில் வந்து, பல் பிடுங்கப் பட்ட பாம்பான ஜெ. வைப் பார்த்து கை நீட்டுகிறது. என்னதான் நினைப்பான் அப்பாவித் தமிழன். யாருக்குத்தான் வாக்களிப்பான். ஆனால் ஒன்று, ஒருமுறைக்கு பலமுறை காயடிக்கப் பட்ட பின்னும் அதே இடத்தில் குறடால் பிடிப்பவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவான் என்பது மட்டும் உறுதி.




இதில் கூடவா அரசியல் செய்வீர்கள் மாக்களே. வைகோ அவர்களும் நெடுமாறன் அவர்களும் இதில் துளியளவும் அரசியல் கலந்துவிடக் கூடாது என்றெண்ணித்தான் யாருக்கும் வெளிப்படுத்தாமல் இந்த ஏற்பாட்டினைச் செய்தார்கள். இதனை மிகவும் தனிப்பட்ட முறையில் பழ.நெடுமாறன் இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப் பட்டு முறைப்படி விண்னப்பம் செய்து அனுமதி பெற்று அழைத்து வர ஏற்பாடு செய்யப் பட்டது. வழக்கமாக வைகோ தொடர் வண்டி நிலையத்துக்கோ, விமான நிலையத்துக்கோ அரசியல் வேலைகளுக்காக செல்லும் போது குறைந்தது 100 பேராவது திரண்டு  வருவார்கள். ஆண்டில் 300 நாட்கள் வரை சுற்றுப் பயணங்களில் மக்களோடு இருப்பவர் வைகோ. ஆனால் அம்மா வருவதையும் வரவேற்க செல்வதையும் கட்சியினரிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் சென்றிருக்கிறார். விமான நுழைவாயிலில் காவல்துறையினரின் கூட்டமும் கெடுபிடியும் கண்ட பின்னரே, கருணா, சோனியா, திருமா கும்பலின் துரோகத்தை அறிந்து கொண்டு, மா.செ. வேளச்சேரி மணிமாறன் அவர்களுக்கு தகவல் சொல்கிறார். நள்ளிரவிலும் அணி அணியாய் ம.தி.மு.க.வினர் விமான நிலையம் வரத் தொடங்கினர். ஆனால் சற்று நேரத்தில் சதி முடிந்து விட்டிருந்தது. கழிவறை செல்லும்போது கூட கட்-அவுட் வைத்து விளம்பரம் செய்வது திருமா, குருமா, கருணா ஆகியோர் வேலை. மற்ற தமிழின உணர்வாளர்களுக்குக்கும் கூட இது பற்றி நிறைய வருத்தம் உள்ளது போல் தெரிகிறது. வருந்த வேண்டியதில்லை. பார்வதியம்மாளுக்கு இந்திய முறைப்படி விசா விண்ணப்பித்து விமானத்தில் அழைத்து வந்ததால் மட்டுமே இந்த சறுக்கல். மேலும் அவரது உடல் நிலை படகுப் பயணத்திற்கு உகந்ததாக இல்லை, அவ்வளவே. இல்லையென்றால் மற்றவர்களைப் போல இவர்களும் வந்திருக்க மாட்டார்களா? என்ன?



இன்று சட்ட மன்றத்தில் பேசிய துரோகி கருணாநிதி பேசியதில் இருந்து அவர்களின் உள்ளக் கிடக்கை வெளியில் வந்து விட்டது. இந்திய அரசே அனுமதி விசா வழங்கினாலும் இவர்கள் அனுமதி இன்றி பார்வதியம்மாள் தமிழகம் வர இயலாது என்பது போலவும், இனியும் வர விரும்பினால் தூதரகம் செல்ல வேண்டாம் என்னிடம் வாருங்கள் என்பது போலவும் பேசி அதிகாரம் தந்த திமிரில் பேசியுள்ளது இந்த கும்பல். டெல்லிக்காரன் எச்சிலைப் பொறுக்கி வாழும் காங். குழுவும் நியாயப் படுத்தியுள்ளது. பார்வதியம்மாள் சென்னை வருவது தெரியாது எனவும் பகன்றுள்ளது பன்னாடை. சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்த பிறகுதான் இந்த கழிசடைக்கு தெரியுமாம். இரண்டு நாட்கள் வரை இவனும் குடும்ப தொ.கா. களும் மூச்சு விடாமல் இருந்தார்களே, தினத்தந்தி கூட படிக்காமலா அரசியல் வியாதியாக இருக்கிறதுகள்?தெரியாதென்றால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தமிழக காவல் துறையினருக்கு இரவு பத்து மணிக்கு மேல் என்ன வேலை? வாரத்தில் இரண்டு முறை விமான நிலையத்திற்கு வரும் வைகோ அவர்களிடம் முறையான அனுமதிச் சீட்டு இருந்தும் வாகனம் நிறுத்துமிடத்திலேயே தடுத்து நிறுத்தும் அதிகாரம் யார் கொடுத்தது? இதற்கு முன்னர் வந்த போதெல்லாம் இப்படித்தான் செய்தார்களா? இனிமேலும் இவ்வாறுதான் செய்யப் போகிறார்களா? ஒவ்வொரு தமிழனும் இனிமேல் கருணாநிதிக்காகவே காது வளர்க்க வேண்டும். அப்போதுதான் வலிக்காமல் வெவ்வேறு இடங்களில் காது குத்தலாம். இல்லையெனில் ஒரே இடத்தில் குத்தி புண்ணாகி விடும். நாடகம் முடியும் நாள் வரும். வேடம் கலையவும் ஓய்வு எடுக்கவும் வேளை வரும்.