Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டைத் தாக்குவதா? தமிழினத் துரோகி கருணாநிதிக்கு கண்டனம்

பச்சைத் தமிழர் பழ.கருப்பையா நல்ல தமிழில் பேசக் கூடியவர். தனித்தமிழில் பேசியும் எழுதி வந்தவர். செட்டிநாட்டு பின்புலத்தில் இருந்து வந்து தமிழர் பண்பாட்டை பாரறிய பரப்பி வந்தவர். தமிழினத் துரோகி கருணாநிதியின் கயமைத் தனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களிலும், தொலைக்கட்சிகளிலும் கருத்துரை வழங்கிவந்தார். அவருடைய கருத்துரைகள் தமிழ் மக்களையெல்லாம் வெகுவாக ஈர்த்துவந்தது.




இந்நிலையில் கருணாநிதியின் கபட வேடங்களையும், செம்மொழி நாடகத்தையும் பற்றி பகிரங்கமாக நேர்காணலிலும், கட்டுரைகளில் எழுதி வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி கும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மக்களாட்சியின் மீது அக்கறை கொண்ட எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இந்த செயல் கருணாநிதியின் அழிவையே காட்டுகிறது.



மக்கள் விரோத கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஆட்டோ வருமா? அல்லது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவு விரைவில் வருமா?

1 comment:

vijayan said...

கருணாநிதி என்ற போலி தமிழனிடமிருந்து தமிழ்நாடு மீள்வது எப்போ.