Tuesday, May 18, 2010

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரைகள் (ஒலி வடிவில் இணைப்பு)

கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலியும், படுகொலைக்கு காரணமானவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய பொதுக் கூட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் உரையாற்றினர். உரை ஒலி வடிவில் கீழே தரப்பட்டுள்ளது..

பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை...

பதிவிறக்கம் செய்ய

வைகோ அவர்கள் ஆற்றிய உரை...

1. பதிவிறக்கம் செய்ய
2. பதிவிறக்கம் செய்ய

வைகோ அவர்கள் உரையாற்றி முடிக்க இருந்த நேரத்தில் காவல்துறை குறுக்கிட்டு கூட்டத்தை முடித்துக் கொள்ள வற்புறுத்தினர். ஏற்கனவே வைகோவின் எழுச்சி மிகு உரையால் உணர்வின் விழிம்பில் இருந்த கூட்டம், காவல் துறை தலையீட்டால் கடும் கோபமடைந்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கூட்டத்தினரால் தாக்கப் பட்டுவிடும் சூழல் ஏற்பட்டது. வைகோ தலையிட்டு கூட்டத்தினரை கட்டுப் படுத்தியதுடன் மேலும் சில நிமிடங்கள் உரையாற்றி விட்டு கூட்டத்தை முடித்து வைத்தார். வைகோவின் சொல்லுக்கு கட்டுப் பட்டு கூட்டம் அமைதியடைந்ததை காவல் துறையினரே பாராட்டினர்.

No comments: