Tuesday, May 18, 2010

முத்துக்குமாருக்கு சிலை அமைக்கத் தடை விதிப்பதா?: வைகோ கண்டனம்.

ஈழத் தமிழருக்காகத் தன் இன்னுயிரையே ஈகம் செய்த முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதைத் தடுத்த தமிழக அரசுக்கு  வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியும், படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு அதில் பங்கேற்றவர்களைக் கண்டித்தும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசிய போது மாவீரன் முத்துக் குமாருக்கு சிலை வைக்கத் தடை விதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிலை வைக்க அனுமதி மறுத்ததற்கு கருணாநிதியின் உண்மை முகத்தைத் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியதாலே தான் எனவும் தெரிவித்தார்.

வைகோ அவர்களின் முழு உரையைக் கேட்க இங்கு அழுத்தவும்.

No comments: